சுகாதாரக்கேடு

Update: 2026-05-17 16:55 GMT
ஓட்டப்பிடாரம் தொகுதி அய்யனடைப்பு ஊராட்சி இந்திராநகரில் வாறுகாலில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் நிரம்பி தெருக்களில் பாய்ந்தோடுகிறது. சில மாதங்களுக்கு ஒரு முறை வாறுகாலை தூய்மை பணியாளர்கள் தூர்வாரி, குப்பைகளை அதன் அருகிலேயே வைத்து செல்கின்றனர். இதனால் சுகாதாரக்கேடாக காட்சி அளிப்பதுடன் குப்பைகள் மீண்டும் வாறுகாலில் விழுந்து அடைப்பு ஏற்படுகிறது. எனவே வாறுகாலில் அடைப்புகளை அகற்றி முறையாக தூர்வார அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்