பிளாஸ்டிக் கழிவுகளால் கால்நடைகளுக்கு பாதிப்பு
திருப்பூர்,பல்லடம் சுற்று வட்டாரத்தில் பிளாஸ்டிக் தடை என்பது பெயருக்குத்தான் உள்ளது எங்கெங்கு காணினும் பிளாஸ்டிக் கழிவுகள் கிடக்கின்றன.இதனால் சுற்றுச்சூழல் கேடு, நீர் வளம், நிலவளம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. காற்றில் பறக்கும் பிளாஸ்டிக் கழிவுகள் மேய்ச்சல் நிலங்களை முழுமையாக ஆக்கிரமித்து வருகின்றன. விவசாயிகளுக்கு உயிர்நாடியாகவும், குழந்தைகள், பெரியவர்களுக்கு பாலை வழங்கும் கால்நடைகள் பிளாஸ்டிக்கை உண்டு விடுகின்றன. இதனால் ் பிளாஸ்டிக் கழிவுகள் கால்நடைகளின் வயிற்றிலேயே தங்கி விடுகின்றன. சிறிது, சிறிதாக பிளாஸ்டிக் கழிவுகள் சேரும்போது மாடுகள் சாப்பிட முடியாமல் பட்டினி கிடந்து உயிரை விடுகின்றன. எனவே பிளாஸ்டிக் தடை உத்தரவை அதிகாரிகள் தீவிரப்படுத்த வேண்டும்.
பழனிவேல்,திருப்பூர்.
98653 86452