மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் விளாச்சேரியில் பழமையான நூலகம் உள்ளது. தற்போது இந்த நூலகம் முறையாக பராமரிக்கப்படாமல் கட்டிடம் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் இங்கு வருவோர் ஒருவித அச்சத்துடனே வந்து செல்கின்றனர். மேலும் நூலகத்தில் புத்தகங்களின் இருப்பும் குறைவாக உள்ளன. இதனால் மாணவர்கள் தாங்கள் விரும்பிய புத்தகம் கிடைக்காமல் சிரமப்படுகின்றனர். எனவே நூலகத்தின் கட்டிடத்தை சீரமைக்கவும், புத்தகங்களின் இருப்பை அதிகரிக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.