புதர் செடிகள் அகற்றப்படுமா?

Update: 2023-06-11 12:14 GMT

கோவை சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சி பிரஸ் காலனி 100 அடி ரோட்டில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சாலையோரம் புதர் மண்டி காணப்படுகிறது. அந்த இடத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் காணப்படுகிறது. இதன் காரணமாக அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அச்சப்படுகிறார்கள். குறிப்பாக இரவில் வீடுகளை விட்டு வெளியே வரவே தயங்குகின்றனர். எனவே அங்கு அடர்ந்து வளர்ந்துள்ள புதர் செடிகளை வெட்டி அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்