நெல்லிக்குப்பம் அருகே சித்தரசூர் மற்றும் வைடிப்பக்கம் வழியாக செல்லக்கூடிய வெள்ளைப்பக்கத்தான் வடிகால் வாய்க்கால் தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் செடி, கொடிகள் அதிக அளவில் வளர்ந்து வாய்க்கால் பச்சை நிறத்தில் காட்சியளிக்கிறது. இதனால் மழைக்காலங்களில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கும் சூழ்நிலை உருவாகி வருகிறது. எனவே வடிகால் வாய்க்காலை தூர்வார வேண்டியது அவசியமாகும்.