திறக்கப்படாத அரசு அலுவலகம்

Update: 2023-06-07 11:51 GMT
நல்லம்பள்ளி அருகே வெங்கட்டம்பட்டி கிராமத்தில் மாதேமங்கலம் ஊராட்சி மன்ற அலுவலகம். இந்த அலுவலகத்திற்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி மக்கள் வீட்டு வரி ரசீது, வீடு கட்டுவதற்கான அனுமதி ஆணை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக நாள்தோறும் வந்து செல்கின்றனர். இவ்வாறு பொதுமக்கள் வரும்போது அந்த அலுவலகம் வேலை நாட்களில் திறக்கப்படுவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தை தினமும் திறந்து அரசு பணி மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்