வாகன காப்பகம் தேவை

Update: 2023-06-07 09:00 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட பார்வதிபுரத்தில் இருந்து வெளியூர்களுக்கு பயணம் செய்யும் பயணிகள் தங்களது வாகனங்களை பாலத்தின் அடிவாரத்தில் நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் அடிக்கடி வாகனங்கள் திருட்டு போகும் சம்பவம் நடந்து வருகிறது. எனவே அந்த பகுதியில் மாநகராட்சி சார்பில் வாகன காப்பகம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்