நாய்கள் தொல்லை

Update: 2023-06-04 15:15 GMT
உளுந்தூர்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட உளுந்தூர் காலணி 5-வது வார்டு பகுதியில் நாய்கள் தொல்லை அதிகமாக உள்ளது. இவை சாலையின் குறுக்கே ஓடுவதால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விழுந்து விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. மேலும் பாதசாரிகள், வயதானவர்கள் சாலையில் நடந்து செல்லும் போது நாய்கள் அவர்களை விரட்டி, விரட்டி கடிக்கின்றன. இதனால் அப்பகுதி மக்கள் அச்சப்படுகின்றனர். எனவே நாய்களை பிடித்து அப்புறப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்