பதாகைகளை அகற்ற வேண்டும்

Update: 2023-06-04 10:27 GMT

மார்த்தாண்டம் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான கடைகள், வணிக வளாகங்கள் உள்ளன. இதனால், எப்போது அந்த பகுதி பரபரப்பாக காணப்படும். சமீபகாலமாக மேம்பாலத்தின் கீழ் பகுதியில் ஏராளமான கட்சிக்கொடிகள், விளம்பர பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருவதுடன், விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பாதசாரிகள் நலன்கருதி பதாகைகள், கட்சி கொடிகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சீமான், குலசேகரம்.

மேலும் செய்திகள்