நிழற்குடை அமைக்க வேண்டும்

Update: 2023-06-04 07:38 GMT

நாகர்கோவில் கோட்டார் ரெயில்நிலையம் வழியாக ஏராளமான பஸ்கள் செல்கின்றன. அவ்வாறு வரும் பஸ்களில் ஏறி கிராமங்களுக்கு செல்வதற்கு ரெயில் நிலையத்தில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள இடிலாக்குடி-ரெயில்நிலைய சாலை சந்திப்பில் நிற்கின்றனர். ஆனால், அந்த சந்திப்பில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இதனால், பயணிகள் வெயிலில் காத்து நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி அந்த சந்திப்பு பகுதியில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனந்தநாராயணன், மருங்கூர்.

மேலும் செய்திகள்