பயன்பாடின்றி தண்ணீர் தொட்டி

Update: 2023-05-31 15:10 GMT

அந்தியூர் சின்னத்தம்பிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட புதுமேட்டூர் கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் தொட்டி பயன்படுத்தப்படாமல் கிடக்கிறது. சுவர் விளம்பரம் செய்யும் சுவராக மாறியுள்ளது. சரியாக வீடுகளுக்கு குடிநீர் வழங்குவதில்லை. 2 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீரின்றி சிரமப்படுகிறார்கள். எனவே பயன்பாட்டில் இல்லாத இந்த தொட்டியை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்