ஆபத்தான மரம்

Update: 2023-05-31 14:40 GMT
கரூர் மாவட்டம், தோகைமலை ஒன்றியம், நெய்தலூர் காலனி, அண்ணாநகர் விநாயகர் கோவில் அருகில் ஒரு பெரிய அரச மரம் உள்ளது. இதன் கிளைகள் வளர்ந்து கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மீது விழுந்தால் உயிர்சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்