கரடிவாவி அரசு மருத்துவமனையைதரம் உயர்த்த வேண்டும்

Update: 2023-05-31 10:48 GMT

கரடிவாவி அரசு மருத்துவமனையை

தரம் உயர்த்த வேண்டும்

பல்லடம் அருகே உள்ள கரடிவாவி அரசு மருத்துவமனை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சிறப்பாக செயல்பட்டு வந்தது. தற்போது போதிய மருத்துவர்கள் இல்லாமலும், இரவு நேர காவலாளி கூட இல்லாத நிலையில் உள்ளது. தினசரி 200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்து செல்லும் நிலையில், மருத்துவமனை வளாகம் போதிய பராமரிப்பு இன்றி உள்ளது. டாக்டர் காலை 9 மணி முதல் 12 மணி வரை மட்டுமே பணிபுரிகிறார். செவிலியர் மாலை 3 மணி வரை பணி புரிகின்றார். இந்த மருத்துவமனையில் அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளது. எனவே மருத்துவமனையை பராமரிப்பு செய்து தரம் உயர்த்தி 24 மணி நேரமும் செயல்பட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராஜா,கரடிவாவி.

8797654253

மேலும் செய்திகள்