ெதருநாய்கள் தொல்லை

Update: 2023-05-31 09:52 GMT

கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை எதிரே உள்ள அண்ணா நகர் செல்லும் வழியில் யானை குழாய் மற்றும் தாமோதரசாமி லே அவுட் ஆகிய பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகளவில் உள்ளது. அவை அந்த வழியாக நடந்து செல்வோரை துரத்தி கடிக்க முயல்கின்றன. மேலும் இருசக்கர வாகனங்களில் செல்வோரை துரத்துகின்றன. இதனால் அவர்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லவே பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சப்படுகிறார்கள். எனவே தெருநாய்கள் தொல்லையை கட்டுப்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் முன்வர வேண்டும். 

மேலும் செய்திகள்