பூட்டி கிடக்கும் கண்காணிப்பு அறை

Update: 2023-05-28 17:16 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி நகரில் போக்குவரத்து நெரிசல் மற்றும் குற்றசம்பவங்களை கண்காணிக்க சூளகிரி ரவுண்டானாவில் போலீசார் சார்பில் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா அறை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இந்த அறை பூட்டியே உள்ளதாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர். இந்த கண்காணிப்பு அறையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

-சக்தி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்