அடிப்படை வசதிகள் வேண்டும்

Update: 2022-07-22 18:11 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட புதிய அரிஜனகாலனி பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி உள்ளிட்டவை இல்லாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இக்காலனிக்கு பெயர் பலகை வைக்கப்படாமல் உள்ளதால் வெளியூரில் இருந்து வருபவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்