அரியலூர்-தஞ்சாவூர் மாவட்டத்தை இணைப்பதில் பெருபங்கு வகிக்கிறது திருமானூர் கொள்ளிடம் பாலம். தற்போது மேட்டூர் அணை நிரம்பியதால் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கொள்ளிடம் பாலத்தில் செல்லும் வாகனங்கள் வேகமாக செல்கின்றன. இதனால் நடந்து செல்லும் பாதசாரிகள் பயத்துடனேயே பாலத்தில் நலந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.