சுகாதார வளாகம் திறக்கப்படுமா?

Update: 2023-05-28 09:13 GMT

பொள்ளாச்சி அருகே மாக்கினாம்பட்டி பகுதியில் மகளிருக்கான சுகாதார வளாகம் உள்ளது. ஆரம்பத்தில் செயல்பட்டு வந்த இந்த வளாகம், அதன்பிறகு உரிய பராமரிப்பு இல்லாததால் மூடப்பட்டது. ஆனால் இதுவரை பராமரிப்பு செய்து, அந்த வளாகம் திறக்கப்படவில்லை. இதன் காரணமாக அங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் வசிக்கும் பெண்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே அந்த சுகாதார வளாகத்தை மீண்டும் திறக்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்