தூர்வார வேண்டும்

Update: 2023-05-28 07:41 GMT

குளச்சல் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வெள்ளியாகுளம் உள்ளது. இந்த குளத்தை அந்த பகுதி மக்கள் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்தி வந்தனர். குளத்தை முறையாக பராமரிக்காததால் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், குளத்தை அந்த பகுதி மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை ஆக்கிரமித்துள்ள செடிகளை அகற்றி தூர்வாரி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ரவி, குளச்சல்.

மேலும் செய்திகள்