தெரு நாய்கள் தொல்லை

Update: 2023-05-24 17:12 GMT
திண்டுக்கல் , நாகல் நகர் , சந்தை ரோட்டில் உள்ள சேலங்கேணி குறுக்கு தெருவில் சமீப காலமாக தெரு நாய்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து விட்டது . கிட்டத்தட்ட 10 நாய்களுக்கு மேலே உள்ளது. இந்த நாய்களின் காரணமாக எங்கள் பகுதில் வசிக்கும் மக்கள் சாலையில் பாதுகாப்பாக நடமாட முடியவில்லை . இரு சக்கர வாகனங்களில் செல்லும் போது கூட்டமாக நாய்கள் துரத்தி கடிக்க வருகின்றன . மேலும் சிறிய குழந்தைகளை தெருவில் விளையாட கூட விட முடியவில்லை . இது மட்டும் அல்லாமல் தெருவில் புதிதாக யாரவது வந்தாலும் அவர்களை துரத்துகின்றன . கடந்த வாரத்தில் ஒரு நாய் குட்டி போட்டு உள்ளதால் அவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல் ஜன நாடமாட்டம் கணிசமாக குறைந்துள்ளது. இவைகளால் சின்ன சின்னதாக சில சம்பவங்கள் நடந்துவிட்டன . அவை பெரிய சம்பவங்களாக மாறாமல் மக்கள் பாதுகாப்பாக நடமாட உதவி செய்யுங்கள்.




மேலும் செய்திகள்