அதிகாலையிலேயே தொடரும் மது விற்பனை

Update: 2023-05-24 16:19 GMT

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் கள்ளச்சாராயம் குடித்து பல பேர் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், அதனை விற்பனை செய்பவர்கள், அரசு மதுபான கடைகளில் மொத்தமாக மதுபாட்டுகளை வாங்கி அனுமதி இல்லாத நேரங்களில் விற்பனை செய்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக போலீஸ் டி.ஜி.பி. அறிவித்து இருந்தார். இதைத்தொடர்ந்து ஒரு சில நாட்கள் மட்டுமே திருட்டுத்தனமாக மது விற்பனை நடைபெறாமல் இருந்தது. ஆனால் மீண்டும் சமயபுரம், எதுமலை, சிறுகனூர், வலையூர், திருப்பைஞ்சீலி, கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட், சிறுகாம்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அதிகாலையிலும், இரவு அரசு மதுபான கடையை பூட்டிய பிறகும் மது விற்பனை படுஜோராக நடந்து வருகிறது. அதிக விலைக்கு மது பாட்டில்கள் விற்பனை செய்யும் போது தேவையில்லாத தகராறும் ஏற்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது. இது சம்பந்தப்பட்ட போலீசாருக்கு தெரிந்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மீண்டும் மனித உயிரிழப்புகள் நடைபெறாமல் இருக்கும் வகையிலும், அடிதடி, வெட்டு- குத்து போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் போலீஸ் உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்