கழிவறைகள் அமைக்கப்படுமா?

Update: 2023-05-24 13:25 GMT

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகராட்சிக்கு உட்பட்ட பஸ் நிறுத்தங்களில் தினமும் ஏராளமான பயணிகள் வந்து பஸ் ஏறி வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். இந்த நிலையில் பயணிகளுக்கு என பஸ் நிறுத்தங்களில் இலவச கழிவறைகள் இல்லாமல் உள்ளதால் அவர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பஸ் நிறுத்தங்களில் இலவச கழிவறைகள் ஏற்படுத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்