இருக்கைகள் சீரமைக்கப்படுமா?

Update: 2023-05-24 08:11 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட ராணிதோட்டத்தில் அரசு போக்குவரத்துக்கழக பணிமனை உள்ளது. இந்த பணிமனையின் முன்பு பஸ்நிறுத்தமும், பயணிகள் நிழற்குடையும் அமைக்கப்பட்டுள்ளது. நிழற்குடையில் அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் வாகனம் மோதி சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அங்கு வரும் பயணிகள் அமர்வதற்கு முடியாமல் பஸ் வரும் வரை நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் நலன்கருதி நிழற்குடையில் சேதமடைந்த இருக்கைகளை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.

-எஸ்.பிரகாஷ், ராணித்தோட்டம்.

மேலும் செய்திகள்