நிழற்குடை அமைப்பது அவசியம்

Update: 2023-05-21 17:24 GMT
கடலூர் புதிய கலெக்டர் அலுவலகம் எதிரே இருந்த பயணிகள் நிழற்குடை கடந்த 2021-ம் ஆண்டு இறுதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டது. புதுச்சேரியில் இருந்து மதுபிரியர்கள் கும்தாமேடு தரைப்பாலம் வழியாகவும் மதுபானங்கள் கடத்தி வந்தனர். இதை தடுக்க போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதோடு, அவர்களின் வசதிக்காக கொட்டகையும் அமைக்கப்பட்டிருந்தது. அதுவும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட நிலையில், போலீசார் திறந்தவெளியில் தான் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சுட்டெரிக்கும் வெயிலில் வாடி வதங்கிய நிலையிலும், சிறிது நேரம் கூட நிழலில் இளைப்பாற இடம் இன்றி தவிக்கின்றனர். எனவே கும்தாமேடு தரைப்பாலம் அருகில் நிழற்குடை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி