ஒளிராத தெருவிளக்குகள்

Update: 2023-05-21 09:20 GMT

கோவை வடவள்ளி மகாராணி அவென்யூ பகுதியில் கடந்த சில நாட்களாக தெருவிளக்குகள் ஒளிருவது இல்லை. இதனால் அந்த பகுதியே இரவில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக அங்கு வசித்து வரும் பொதுமக்கள் அவசர தேவைக்கு கூட வீடுகை விட்டு வெளியே வர முடியாமல் அவதிப்படுகிறார்கள். மேலும் அங்கு திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்பு உள்ளது. இது தவிர விஷ ஜந்துகளின் நடமாட்டமும் அதிகரித்து விட்டது. எனவே தெருவிளக்குகளை மீண்டும் ஒளிர வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்