நடவடிக்கை தேவை

Update: 2023-05-21 07:50 GMT

நடவடிக்கை தேவை

தக்கலையில் கல்குளம் தாலுகா அலுவலகம் உள்ளது. தக்கலை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆதார் அட்டையில் திருத்தம் செய்வதற்காக இந்த அலுவலகத்தில் வந்து பயனடைந்து வந்தனர். தற்போது இந்த அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்யும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பல்வேறு தேவைகளுக்கு ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் அதில் திருத்தம் செய்ய முடியாமல் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி தாலுகா அலுவலகத்தில் ஆதார் திருத்தம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்ைக எடுக்க வேண்டும்.

-பெர்னார்த்,திங்கள் நகர்.

மேலும் செய்திகள்