புதர்மண்டி காட்சியளிக்கும் தெரு

Update: 2023-05-14 15:19 GMT

போடி மேலச்சொக்கநாதபுரம் 8-வது வார்டில் உள்ள தெருவில் செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த தெருவில் முக்கால்வாசி பகுதி புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்