புதர்மண்டி காட்சியளிக்கும் தெரு

Update: 2023-05-14 15:19 GMT

போடி மேலச்சொக்கநாதபுரம் 8-வது வார்டில் உள்ள தெருவில் செடி-கொடிகள் வளர்ந்து ஆக்கிரமித்துள்ளன. இதனால் அந்த தெருவில் முக்கால்வாசி பகுதி புதர்மண்டிய நிலையில் காட்சியளிக்கிறது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே புதர்களை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

மயான வசதி