பட்டுப்போன மரம் வெட்டி அகற்றப்படுமா?

Update: 2023-05-14 15:12 GMT

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த திருவையாறு-கும்பகோணம் மெயின் சாலையில் உள்ளிக்கடை பகுதியில் சாலையோரத்தில் பட்டுபோன மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் கிளைகள் அவ்வபோது சாலையில் முறிந்து விழுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சாலையில் பயணம் செய்யும் சூழல் நிலவுகிறது. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பட்டுபோன மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்