பாலத்தில் பள்ளம்

Update: 2023-05-14 11:52 GMT

கரூர் பெரிய ஆண்டாங்கோவில் பகுதியில் உள்ள பெரியார் நகருக்கு செல்லும் வழியில் சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலம் கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது சிதிலமடைந்து அதில் பள்ளம் ஏற்பட்டு உள்ளது. இதில் யாரேனும் தவறி விழுந்து விடக்கூடாது என அப்பகுதி மக்கள் குச்சிகள் வைத்தும், கற்களை போட்டும், கட்டைகளை வைத்து, பள்ளத்தை மூடி வைத்துள்ளனர். இருப்பினும் இரவு நேரத்தில் விபத்து ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்