சுகாதார வளாகம் வேண்டும்

Update: 2023-05-10 17:23 GMT

சேலம் மாவட்டம் தாரமங்கலம் 23-வது வார்டில் ஆறுபடை நகர், திருவள்ளுவர் நகர், சண்முகா நகர், மகாத்மா காந்தி வீதி, தங்கசாலை வீதி உள்ளன. இங்கு சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஆண்களுக்கு என்று தனியாக சுகாதார வளாகம் இல்லை. இதனால் வீட்டில் கழிப்பிட வசதி இல்லாதவர்கள் அருகிலுள்ள காட்டு பகுதிக்கு சென்று வருகின்றனர். அங்கு இரவு நேரங்களில் பாம்பு போன்ற விஷ பூச்சிகள் நடமாட்டம் உள்ளது. எனவே ஆண்களுக்கு என்று தனியாக சுகாதார வளாகம் அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்