கரூர் மாவட்டம் நொய்யல் அருகே முத்தனூரில் தார் சாலையின் குறுக்கே புதிய பாலம் கட்டப்பட்டது .புதிய பாலம் கட்டுவதற்காக பாலத்தை ஒட்டி மண் சாலை அமைக்கப்பட்டு மண்சாலையின் அடியில் குழாய் பதிக்கப்பட்டு அந்த குழாய் வழியாக கவுண்டன் புதூர் பகுதியில் இருந்து வெளியேறும் உபரி நீர் மற்றும் மழைநீர் செல்லும் வகையில் புகலூர் வாய்க்கால் வரை சிறிதாக நெடுகிலும் பொக்லைன் மூலம் குழி பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக வரும்போது வேகமாக வெளியேறி செல்ல முடியாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
இந்நிலையில் தொடர்ந்து பெய்து வந்த மழையின் காரணமாக மழைநீர் கால்வாய் வழியாக வரும்போது வேகமாக வெளியேறி செல்ல முடியாமல் அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.