நடவடிக்கை தேவை

Update: 2023-05-10 08:59 GMT

 திங்கள்சந்தை பகுதியில் ராதாகிருஷ்ணன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சுற்றுச்சுவர் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. மேலும், பக்தர்களின் தங்கும் விடுதியின் மேற்கூரையும் சீரமைக்கப்படாமல், கழிப்பறைகள் இல்லாமலும் உள்ளது. இதனால், திருவிழா காலங்களில் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனர். எனவே, கோவிலின் சுற்றுச்சுவர், விடுதி மேற்கூரை, கழிப்பறை வசதிகள் என சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அரவிந்த், குளச்சல்.

மேலும் செய்திகள்