கடலூர் அருகே நத்தப்பட்டு காலனியில் இறந்தவர்களை புதைப்பதற்கு வசதியாக சுடுகாடு வசதி இல்லை. இதனால் அப்பகுதியில் வசிக்கும் ஆதிதிராவிடர்கள் இறந்தவர்களின் உடலை பெண்ணையாற்றிற்கு கொண்டு செல்லும் நிலை உள்ளது. இதனால் மழைக்காலங்களில் கடும் அவதிப்படுகின்றனர். எனவே நத்தப்பட்டு காலனியில் சுடுகாடு வசதி ஏற்படுத்தி தர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.