நாய்கள் தொல்லை

Update: 2023-05-07 11:12 GMT

தஞ்சை புதுஆற்றங்கரை பில்லுக்காரத்தெரு பகுதியில் நாய்கள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை இரவு நேரங்களில் வாகனங்களில் செல்பவர்களை துரத்தி செல்கின்றன. இதனால் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்து விடுகின்றனர். இதன்காரணமாக அந்த வழியாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்

மேலும் செய்திகள்