விபத்து அபாயம்

Update: 2023-05-07 07:26 GMT

வடசேரியில் பஸ்நிலையம் உள்ளது. இந்த நிலையில் இருந்து குமரி மாவட்டத்தின் பல பகுதிகளுக்கும், வெளி மாவட்டம் மற்றும் அண்டை மாநிலமாக கேரளாவுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றனர். இதனால், பஸ்நிலையம் எப்போதும் பரபரப்பாக காணப்படும். கடந்த சில வாரங்களுக்கு முன் பஸ்நிலைய கட்டிட பராமரிப்பு பணி நடந்தது. அதில் உள்ள கழிவுகள் அகற்றப்படாமல் நிலையத்தில் ஆங்காங்கே குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாவதுடன் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, கட்டிட கழிவுகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.ஜோணி, நாகர்கோவில்.

மேலும் செய்திகள்