பாலம் சரிசெய்யப்படுமா?

Update: 2023-05-03 15:12 GMT
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் இருந்து செங்கப்பட்டி செல்லும் சாலையில் பாலம் ஒன்று உள்ளது. அந்த பாலத்தின் மேல் உள்ள சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் பஸ்கள் செல்லும்போது தூக்கி அடிக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாலத்தை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்