கன்னியாகுமரி, திருவனந்துபுரம், கொல்லம் மாவட்டங்களில் உள்ள மக்கள் மதுரை, திருச்சி, சமயபுரம், ஸ்ரீரங்கம், தஞ்சை பெரியகோவில், நாகூர் தர்க்கா, வேளாங்கண்ணி ஆகிய புனித தலங்களுக்கு சென்று வருகின்றனர். ஆனால், இந்த மார்க்கமாக ரெயில்கள் இயக்கப்படவில்லை. எனவே, பக்தர்கள் நலன் கருதி கொல்லத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை, மதுரை, திருச்சி, தஞ்சை மார்க்கத்தில் ரெயில் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.