கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்படுமா?

Update: 2023-04-26 13:40 GMT

திருச்சி மாவட்டத்தில் மணப்பாறை வட்டம் ஒரு முக்கிய நகரமாக திகழ்ந்து வருகிறது. ஆயினும் சமீப காலமாக நகரத்தின் முக்கிய இடங்களில் குறிப்பாக செவலூர் ரோடு, மணப்பாறை சந்தை பகுதிகளில் கொள்ளை மற்றும் வழிப்பறி, வாகனங்கள் திருட்டு அதிக அளவில் நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் மாணவ- மாணவிகள், குழந்தைகள் வெளியே நடமாட முடியாமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். எனவே நகரில் உள்ள முக்கிய இடங்களில் கண்கானிப்பு கேமராக்கள் பொருத்தி குற்றவாளிகளை விரைவில் பிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்