கடலூர் உழவர்சந்தை எதிரே சாலையோரத்தில் ஆட்டோக்களை தாறுமாறாக நிறுத்தி, பயணிகளை ஏற்றிச்செல்கின்றனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதோடு, விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. மேலும் சாலையோரத்தில் ஆட்டோக்கள் அதிக அளவில் நிறுத்தியிருப்பதால், பாதசாரிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.