கடலூர் அருகே காரமணிக்குப்பத்தில் உள்ள வி.எஸ்.எல். நகரில் இருந்து பாலாஜி நகருக்கு செல்லும் பகுதியை தனிநபா் ஆக்கிரமித்து மதில்சுவர் அமைத்துள்ளார். இதனால் அப்பகுதி மக்கள் வெகுதூரம் சுற்றிச்செல்லும் நிலை உள்ளதால், பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே ஆக்கிரமிப்பை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.