ஆற்று பாலம் அவசியம்

Update: 2023-04-19 16:49 GMT

போடி அருகே அணைக்கரைபட்டி ஊராட்சி மேலப்பரவூ கிராமத்துக்கு செல்லும் பாதையின் குறுக்கே கொட்டக்குடி ஆறு செல்கிறது. மழை காலத்தில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் போது மேலப்பரவூ கிராம மக்கள் பெரும் சிரமப்படுகின்றனர். குழந்தைகள் பள்ளிக்கு செல்ல முடியவில்லை. எனவே ஆற்றின் குறுக்கே பாலம் கட்டி தரவேண்டும்.

மேலும் செய்திகள்