மாற்று இடம் வழங்க வேண்டும்

Update: 2023-04-16 17:34 GMT
செஞ்சி தாலுகா பொண்ணங்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட துத்திப்பட்டு கிராமத்தில் கடந்த ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. இருப்பினும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை மாற்று இடம் வழங்கவில்லை. இதனால் ஆக்கிரமிப்பு பகுதியில் இருந்தவர்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். இதுகுறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. எனவே பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம் வழங்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்