நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2023-04-16 08:13 GMT

முழுக்கோடு ஊராட்சியில் உத்திரம்கோடு கிறிஸ்தவ ஆலயம் அருகில் இருந்து வித்தறுத்தான்விளைக்கு செல்லும் சாலையில் உள்ளது. இந்த சாைலயோரத்தில் மண்மேட்டின் மீது பிளாஸ்டிக் தண்ணீர் டேங்க், அதன் அருகில் மின்கம்பமும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மண்மேட்டை ஆக்கிரமித்து மண் எடுத்தால் தண்ணீர் டேங்க் மற்றும் மின்கம்பமும் சாலையில் சரிந்து விழும் அபாயம் நிலையில் காணப்படுகிறது. இதனால், தண்ணீர் டேங்கோ, மின்கம்பமோ எப்போது வேண்டுமானாலும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் டேங்க், மின்கம்பத்தை மாற்று இடத்தில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-அனில்குமார், முழுக்கோடு.

மேலும் செய்திகள்