ஏரியை சீரமைக்க வேண்டும்

Update: 2023-04-12 17:22 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே நாச்சிகுப்பம் கிராமத்தில் உள்ள ஏரியில் அப்பகுதியில் அமைந்துள்ள கடைகளின் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகளை கொண்டு வந்து கொட்டுகின்றனர். இதனால் அந்த ஏரியில் துர்நாற்றம் வீசுவதுடன் கொசு உற்பத்தி ஆகி சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் நோய் பரவும் அபாயமும் உள்ளது. எனவே இந்த ஏரியை சுத்தம் செய்து சீரமைக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சதிஸ்குமார், வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்