போதிய இருக்கை வசதி தேவை

Update: 2023-04-12 08:44 GMT

 வடசேரி பஸ்நிலையத்தில் இருந்து வெளியூர்களுக்கு அரசு விரைவு போக்குவரத்துகழக பஸ்கள் நிற்கும் நிறுத்தம் உள்ளது. அந்த பஸ்களில் செல்வதற்காக நாகர்கோவிலின் பல பகுதிகளில் இருந்தும் மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் பயணிகள் வருகை தருகின்றனர். அவ்வாறு வரும் பயணிகள் பஸ்சிற்காக காத்திருப்பதற்காக அங்கு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், போதிய இருக்கை வசதிகள் இல்லை. பல இருக்கைகள் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயணிகள் பல மணிநேரம் நிற்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, போதிய இருக்கை வசதி ஏற்படுத்திதர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஆன்றணி சதீஷ், ஆசாரிபள்ளம்.

மேலும் செய்திகள்