வெளியே நடமாட மக்கள் அச்சம்

Update: 2023-04-09 13:12 GMT

கரூர் தான்தோன்றிமலை கணபதிபாளையத்துக்கு உட்பட்ட அன்புநகர் பகுதியில் காலியிடங்களில் தேவையில்லாத கற்கள், குப்பைகள் போட்டு வைத்துள்ளனர். தற்போது கோடை காலம் என்பதால் அதிலிருந்து பாம்புகள், தேள், பூரான் போன்ற விஷ ஜந்துக்கள் அருகில் உள்ள குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டிற்குள் வருகின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் அச்சத்துடன் உள்ளன. சிறுவர்கள் வெளியில் சென்று விளையாட முடியவில்லை. இரவு நேரத்தில் அந்த வழியாக வரும் வாகன சக்கரங்களில் இந்த விஷ ஜந்துக்கள் சிக்கிக் கொள்கிறது. எனவே இப்பகுதியில் உள்ள தேவையற்ற கற்கள், புதர்களை அகற்ற வேண்டும். 

மேலும் செய்திகள்