ஆமை வேகத்தில் பாதாள சாக்கடை பணிகள்

Update: 2023-04-09 10:28 GMT

தஞ்சை தெற்கு வீதி, கீழராஜவீதியில் ஸ்மார்ட் திட்டத்தின் கீழ் சாலை அகலப்படுத்தும் பணி, பாதாள சாக்கடை பணிகள் நடக்கிறது. இதற்காக அந்த பகுதியில் கடைகள், வீடுகள் முன்பு இருந்த ஆக்கிரமிப்புகள் பொக்லின் எந்திரம் மூலம் அகற்றப்பட்டது. பாதாள சாக்கடை பணிக்காக பள்ளம் தோண்டப்பட்டது. இதனால் அந்த பகுதியில் உள்ள கடைகளுக்கு வாடிக்கையாளர்கள் வருவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது. பள்ளம் தோண்டப்பட்டு பல நாட்கள் ஆகியும் இன்று வரை பணிகள் முறையாக முடிக்கப்படாமல் உள்ளது. இதன்காரணமாக கடைகள் மூடப்பட்டுள்ளன. கடையில் உள்ள பொருட்களும் வீணாகின்றன. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்கள், வியாபாரிகள் நலன் கருதி பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்