பன்றிகள் தொல்லை

Update: 2023-04-09 10:26 GMT

தஞ்சை சீனிவாசபுரம் சிங்கபெருமாள் குளம் அருகே உள்ள தெருக்களில் பன்றிகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இவை சாக்கடை கழிவுநீரில் புரண்டு எழுந்து குடியிருப்பு பகுதிக்குள் சுற்றிதிரிகின்றன. இதன்காரணமாக அந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. கூட்டமாக சுற்றித்திரியும் பன்றிகளால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுற்றித்திரியும் பன்றிகளை பிடித்து செல்ல நடவடிக்கை எடுப்பார்களா?


மேலும் செய்திகள்