அகற்ற வேண்டிய மரம்

Update: 2023-04-05 07:03 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட கோர்ட்டு ரோட்டில் இருந்து டதி பெண்கள் பள்ளி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் மிக பழமையான மரம் ஒன்று பட்டுப்போன நிலையில் சாலையோரத்தில் நிற்கிறது. எப்போது வேண்டுமானாலும் அந்த மரம் காற்றின் வேகத்திற்கு அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மரத்தை வெட்டி அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-நாஞ்சில் விஷ்ணு, சந்தைவிளை

மேலும் செய்திகள்