நாகை மாவட்டம் தெற்கு பொய்கை நல்லூர் கிராமத்தில் உள்ள வீடுகளுக்கு மின்சார அளவு குறிக்கப்படும் அட்டை இது வரை வழங்கப்படவில்லை. இதனால் அங்குள்ள பொதுமக்கள் மின் கட்டணம் எவ்வளவு என்று தெரிவது இல்லை. மேலும் இறுதி நாள் எது என்று தெரிவது இல்லை. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் அட்டை கேட்டால் கொடுப்பது இல்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொதுமக்கள், தெற்கு பொய்கை நல்லூர்